10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு
- Reporter 12
- 07 Apr, 2024
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்றுடன் (ஏப்.8) நிறைவடையவுள்ளது.
மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வை, சுமார் 9.1 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், கடைசி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்.12 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கவிருக்கிறது. மே 10ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை
தமிழக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்றோடு (08.04.2024) நிறைவு பெறுகிறது. ஆகையால், நாளை முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும், ஆசிரியர்களும் பிரியா விடை அளிக்க உள்ளனர். அடுத்த கட்டமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் 11ம் வகுப்பு (அ) பல்தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராக உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *